Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சும்மாகிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி

                        திரிசங்கு என்ற மன்னனுக்கு தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் தன்னுடைய குருவான வசிஷ்டரிடம் தன் கருத்தை சொன்னான். அவர் அப்படி எந்த மனிதனாலும் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொன்னார். அதற்க்கு அவன் யார் ஒருவர் தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல வழி செய்பவரே இனி என்னுடைய குருவாவார் என்றான்.                       வசிஷ்டருக்கு கோபம் வந்தது உடனே நீ நோயுள்ளவனாக மாறுவாய் என சாபமிட்டார். அதனால் திரிசங்குவிற்கு உடல் கலை இழந்தது நாட்டை விட்டு காட்டிற்கு சென்றான். ஒருநாள் விஸ்வாமித்திரர் வருவதை கண்டு வணங்கினான். அவர் யார் நீ என கேட்டதற்கு நடந்த விபரத்தை சொன்னான். விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்கு தன் தவ வலிமையினால் சொர்கத்திற்கு அனுப்பினார்.                          அங்கு தேவ தூதர்கள் இந்திரனிடம் போய் சொன்னார்கள். இந்திரன் திரிசங்குவை காலால் எட்டி உதைத்தான். திரிசங்க...

ஸ்ரீ நவ கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீ நவ பைரவர்கள்

ஸ்ரீ கபால பைரவர் (ஞாயிறு)  : சூரிய தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சூரியன் நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தந்தையுடன் பிரச்சனை உள்ளவர்கள், அரசு சம்பத்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும். ஸ்ரீ உருபைரவர் (திங்கள்) : சந்திர தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சந்திரன்  நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தாயின் உடல் நலபாதிப்பு, மன அமைதியின்மை போன்றவற்றால் பாதிப்பு உள்ளவர் இவரை வணங்க வேண்டும். ஸ்ரீ சண்ட பைரவர் (செவ்வாய்) : செவ்வாய் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், செவ்வாய்  நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷமுள்ளவர்கள்சகோதரரிடம் பிரச்சனை உள்ளவர்கள், நிலம், வீடு, சொத்து பிரச்சனை உள்ளவர்கள் இவரை வணங்க வேண்டும். ஸ்ரீ அசிதாங்க பைரவர் (புதன்) : புதன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், புதன் நீசம், வக்கிரம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தாய் மாமன் வழியில் பிரச்சனை உள்ளவர்கள், கல்வியில் பிரச்சனை உள்ளவர்கள் இவரை...

சபரிமலைக்கு மாலை அணிந்த பிறகு தர்ப்பணம் செய்யலாமா?

                          சபரிமலைக்கு மாலை அணிந்த பிறகு தர்ப்பணம் செய்வது சரிதான். ஐய்யப்பன் பம்பையில் தன்னுடைய முன்னோர்களுக்கு தர்பணம் செய்தார். எந்த செயலையும் தொடங்கும் போது நம்முடைய பித்ருக்குக்களை ( இறந்த முன்னோர்களுக்கு ) நினைத்து வணங்கிய பின்னர் குலதெய்வத்தை வணங்கவேண்டும்.                            அவ்வாறு செய்தால் தான் அந்த காரியம் பூர்த்தியாகும். இல்லையேல் எந்த செயல் செய்தாலும் குழப்பங்களும், பிரச்சனைகளும் வந்து சேரலாம். ஒருவருக்கு குழந்தை பிறப்பதற்கு ஜோதிட ரீதியாக பூர்வபுன்னிய ஸ்தானனாதிபதி பலம் இல்லை என்றால் கால தாமதமாகலாம்.                            தர்ப்பணம் என்பது தர்ப்பை + அர்ப்பணம் ( சமர்பித்தல்) ஆகும். தர்ப்பை என்பது பவித்ரமான புல் ஆகும். இதை அணிந்து கொண்டு எள்ளை வைத்து பிண்டம் செய்து கொடுப்பதாகும்.எள் என்பது லக்ஷ்மி.           ...

சந்திராஷடமம்

                            நாம் ராசி பலன் பார்க்கும் போது சந்திராஷடமம் அதனால் கவனம் தேவை எழுதுவர். நாம் பயந்து அன்று எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம். அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள். சந்திரன் ஏட்டில் நிற்பது சந்திராஷடமம் ஆகும். ஒருவர் பிறந்த ராசியிலிருந்து ஒவ்வொரு ராசியாக கடந்து சந்திரன் எட்டமிடம் வருவது சந்திராஷடமம் ஆகும். எட்டு என்ற எண் கஷ்டங்களை தரும் காரணம் எட்டிற்கு அதிபதியாவர் சனீச்வர பகவான்  ஆவர்.                         எட்டாம் பிறப்பு எட்டி பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவர் என்பது பழமொழி. எட்டாவதாக பிறக்கும் பெண் குழந்தையை சொல்லுவதுண்டு. எட்டாவதாக பிறந்த கிருஷ்ணன் தன் மாமன் கம்சனையே கொன்று தன் குலத்தையே நாசம் செய்தார்.                         பௌர்ணமி, அம்மாவாசைக்கு பிறகு வரும் எட்டாவது நாளை அஷ்டமி என்று எந்த ஒரு நல்ல செயலையும் செய்யாமல் ஒதுக்கி வைக்கிறோம் முஸ்லிம்கள்கூ...

ஏழரைச் சனி

                    ஜென்மராசி அதன் முந்தைய ராசி அடுத்த ராசி ஆகிய இடங்களில் சனி வரும் காலம் ஏழரைச் சனி காலமாகும். மனிதனின் ஆயுளில் மூன்று அல்லது நான்கு முறை வரும். இளமையில் வரும் ஏழரைச் சனி மங்குசனி ஆகும். இதனால் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். உடல் தொந்தரவுகள், பெற்றோருக்கு பொருளாதார சிரமம் ஏற்படும். மற்றும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒற்றுமை சீர்குலையும்.                     இரண்டாவதாக வரும் ஏழரைச் சனி பொங்குசனி ஆகும். தொழில், பொருளாதார விருத்தி அடையும். பெற்றோருக்கு உடல் தொந்தரவுகள், கண்டங்கள் ஏற்படலாம்.                      மூன்றாவதாக வரும் ஏழரைச் சனி மரணசனி ஆகும். இதனால் முதுமையினால் ஏற்படும் நோய், உடல்தளர்ச்சி, மரணம் ஏற்படலாம். அட்டமசனி                      சனிபகவான் எட்டாம் இடத்தில் வருவதே அட்டமசனி ஆகும். இதனால் வீண் அவமானம், பழிபாவம...

கழிவறை அமைக்க

நாம் அன்றாடம் உடல் கழிவுகளை வெளியேற்ற கழிவறை மிக முக்கியம். அந்த கழிவறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க சில சாஸ்திரங்கள் படி அமைக்கவும்.                  கழிவறையின் கதவு தானாக முடும் படி இருத்தல் அவசியம். அந்த கதவு மூடாமல் இருப்பது வீட்டில் வசிப்பவருக்கு கெடுதல் உண்டாக்கும்.இதில் கவனம் தேவை.  கழிவறையின் தரை தளம் வீட்டின் தரை தளத்தைவிட உயரமாக இல்லாமல் பார்க்கவும். நம் வீட்டின் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் வைக்கவும். மேல்மாடியில் வைக்கும் கழிவறையின் தரைதளம்  உயராமல் இருக்க அரை அடி பள்ளமாக வைக்கலாம். கழிவறையின் கோப்பை வடக்கு தெற்காக இருக்கவும்.

ஆம இடக்காவு - ராகு தோஷம், சர்ப்ப தோஷம் (கோபம்) நிவர்த்தி ஆலயம்

                             கேரளத்திலுள்ள சர்ப்ப ஆலயம் ஆம இடக்காவு. பண்டைய காலத்தில் பரசுராமர் ஆம இடக்காவுக்கு வந்தார். ஆமைக்கு மேல் நாககன்னிகள் இருப்பதை கண்டார். நாககன்னியை ஆமையின் மீது இருந்து இறங்கி செல்லச் சொன்னார் பரசுராமர். நாககன்னிகள் ஆமையை விட்டு கீழே இறங்கி சென்றபின் ஆமை அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கயே நின்றது.                         ஆமையையும், நாககன்னிகளையும் அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தார் பரசுராமர். அந்த இடமே ஆம இடக்காவு என பெயர் பெற்றது. பின்னர் அங்கே பிராமணரை அழைத்து பூஜை செய்தார். நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் பூஜை செய்தால் நல்லதே நடக்கும் என்றார். அந்த வம்சத்தில் வந்தவர்களே இன்றும் பூஜை செய்கின்றனர்.                                       இங்கே நாக பூஜை பிரசித்தி பெற்றது.காவுகளும் (சர்ப்பம்), காவு விருட்சங்களும் உள்ளன. இவற்றை ஒரு பீடத்...