Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சபரிமலைக்கு மாலை அணிந்த பிறகு தர்ப்பணம் செய்யலாமா?

                         

சபரிமலைக்கு மாலை அணிந்த பிறகு தர்ப்பணம் செய்வது சரிதான். ஐய்யப்பன் பம்பையில் தன்னுடைய முன்னோர்களுக்கு தர்பணம் செய்தார். எந்த செயலையும் தொடங்கும் போது நம்முடைய பித்ருக்குக்களை ( இறந்த முன்னோர்களுக்கு ) நினைத்து வணங்கிய பின்னர் குலதெய்வத்தை வணங்கவேண்டும்.

                           அவ்வாறு செய்தால் தான் அந்த காரியம் பூர்த்தியாகும். இல்லையேல் எந்த செயல் செய்தாலும் குழப்பங்களும், பிரச்சனைகளும் வந்து சேரலாம். ஒருவருக்கு குழந்தை பிறப்பதற்கு ஜோதிட ரீதியாக பூர்வபுன்னிய ஸ்தானனாதிபதி பலம் இல்லை என்றால் கால தாமதமாகலாம்.

                           தர்ப்பணம் என்பது தர்ப்பை + அர்ப்பணம் ( சமர்பித்தல்) ஆகும். தர்ப்பை என்பது பவித்ரமான புல் ஆகும். இதை அணிந்து கொண்டு எள்ளை வைத்து பிண்டம் செய்து கொடுப்பதாகும்.எள் என்பது லக்ஷ்மி.

                          பாற்கடலை கடையும் போது வெளிவந்தவள் லக்ஷ்மி தேவி. இவளை அடைய தேவர்கள், அசுரர்கள் வந்து என்னை திருமணம் செய்துகொள் என்று தங்களுடைய புகழை சொன்னார்கள். ஆனால் தேவி அவர்களை விட்டு வாசுகி கக்கிய விஷத்தினால் உடல் கருத்து இருந்த விஷ்ணுவை நெருங்கி வந்தாள். விஷ்ணு பகவான் அவளை விட்டு ஒதுங்கி போனார். லக்ஷ்மி தேவி அவர் செல்லும் இடத்தில் எள்ளு செடியாக முளைத்து நின்றாள். அவரின் காலால் மிதிபட்டு அவருடன் கலந்தார்.

                         நாம் செய்யும் தர்ப்பணத்தால் எள்கள் அனைத்தும் விஷ்ணுவில் மேல் படுவதால் அவர் மகிழ்ந்து நிறைய செல்வங்களை கொடுப்பார். இறந்தவர்களுக்கு ஒரு வருடம் என்பது ஒரு நாளாகும். திதி அன்று செய்ய முடியாதவர்கள் பம்பையில் செய்தல் பித்ருக்கு சந்தோசமாகும். அதனால் கண்டிப்பாக மாலை அணிந்தவர்கள் செய்வது நலம் பயக்கும். மற்றும் விரதமாக இருப்பதால் பலன் நூறு மடங்காகும்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...