Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

வாஸ்து

               வாஸ்து பகவான் தோன்றிய கதை 

            அரக்க வம்சத்தில் தோன்றிய அண்டகாசூரன் சிவனிடம் தவமிருந்து சகாவரத்தினை கேட்டான். சிவன் மறுக்கவே உங்களை தவிர வேறு யாராலும் எனக்கு மரணம் வரக்கூடாது என வரம் கேட்டான். சிவன் கொடுத்தார். வரத்தினை பெற்ற அண்டகாசூரன் மூவுலகங்களையும் அடக்கி கொடுமை படுத்தினான். சிவ வழிபாடு கொண்டதால் அவனை அழிக்கமுடியவில்லை.

                  நாரதர் அண்டகாசூரனிடம் சிவ நிந்தனை செய்ய வைத்தார். அதனால் சிவனுக்கு அவிர்பாகம் கொடுக்க கூடாது எனக்கே சேரவேண்டும் என்று சிவபக்தர்களை கொடுமை படுத்தினான். பின்னர் சிவனிடம் சென்று போருக்கு அழைத்தான். சிவனும் அண்டகாசூரனும் சண்டையிடும் போது சிவனிடமிருந்து விழுந்த வியர்வை துளியிலிருந்து ஒரு பூதம் உண்டானது.

                   அதனிடத்தில் பசி அதிகமாக உண்டானதால் இறந்து கிடக்கும் உடல்களை தின்ன சொன்னார் சிவன். அண்டகாசூரன் உடலை தின்னும் பசி அடங்கவில்லை. பூதம் சிவனிடம் தான் விரும்பியதையெல்லாம் உண்ண வரம் கேட்டது. சிவன் வரம் கொடுத்தார். கண்ணில் பட்ட அனைத்தையும் உண்டது. இதனால் பயந்த தேவர்கள் பூதத்தை பூமியில் வீழ்ந்து வணங்கினால் உண்ண நிறையகிடைக்கும் என சொன்னார்கள். அதன்படி பூதம் கீழே விழுந்த உடன் அனைத்து தெய்வங்களும் அதன் மேல் உட்கார்ந்தது.

                   பூதம் வலி தாங்கமுடியாமல் பிரம்மதேவனிடம் தன்னை காப்பாற்றும்படி கேட்டது. பிரம்ம உன்னுடைய கோரப்பசி தணிய பூமி பூஜை செய்து வீடு கட்டும் போது செய்யும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால் வீட்டில் உள்ளவரை வாட்டு என்று சொன்னார்.


  1. கழிவறை அமைப்பது 
  2. பூஜை அறை அமைப்பது


Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...