Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சும்மாகிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி

                        திரிசங்கு என்ற மன்னனுக்கு தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் தன்னுடைய குருவான வசிஷ்டரிடம் தன் கருத்தை சொன்னான். அவர் அப்படி எந்த மனிதனாலும் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொன்னார். அதற்க்கு அவன் யார் ஒருவர் தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல வழி செய்பவரே இனி என்னுடைய குருவாவார் என்றான்.

                     

வசிஷ்டருக்கு கோபம் வந்தது உடனே நீ நோயுள்ளவனாக மாறுவாய் என சாபமிட்டார். அதனால் திரிசங்குவிற்கு உடல் கலை இழந்தது நாட்டை விட்டு காட்டிற்கு சென்றான். ஒருநாள் விஸ்வாமித்திரர் வருவதை கண்டு வணங்கினான். அவர் யார் நீ என கேட்டதற்கு நடந்த விபரத்தை சொன்னான். விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்கு தன் தவ வலிமையினால் சொர்கத்திற்கு அனுப்பினார்.

                         அங்கு தேவ தூதர்கள் இந்திரனிடம் போய் சொன்னார்கள். இந்திரன் திரிசங்குவை காலால் எட்டி உதைத்தான். திரிசங்கு கீழே விழும் போது விஸ்வாமித்திரரை அழைத்தான். அவர் அவனை அங்கேயே நிற்க செய்து தன் தவ வலிமையால் ஒரு சொர்க்கத்தையே உண்டாக்கினார். அதுவே திரிசங்கு சொர்க்கம் ஆகும்.

                         அவர் தன் தவ வலிமை அனைத்தும் இழந்து மீண்டும் தவம் செய்ய சென்றார். சும்மா இருந்த திரிசங்கை நான் உனக்கு உதவுவேன் என்று தன் தவ வலிமையை கொடுத்தான் ஆண்டி (விஸ்வாமித்திரர்). நாம் உணர்ச்சிவசப்படுவதால் நிறைய இழப்புகளை சந்திக்கிறோம். ஆகவே நிதானமாக யோசித்து செய்தால் வெற்றி பெறலாம்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...