Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சந்திராஷடமம்

                           

நாம் ராசி பலன் பார்க்கும் போது சந்திராஷடமம் அதனால் கவனம் தேவை எழுதுவர். நாம் பயந்து அன்று எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம். அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள். சந்திரன் ஏட்டில் நிற்பது சந்திராஷடமம் ஆகும். ஒருவர் பிறந்த ராசியிலிருந்து ஒவ்வொரு ராசியாக கடந்து சந்திரன் எட்டமிடம் வருவது சந்திராஷடமம் ஆகும். எட்டு என்ற எண் கஷ்டங்களை தரும் காரணம் எட்டிற்கு அதிபதியாவர் சனீச்வர பகவான் ஆவர்.

                        எட்டாம் பிறப்பு எட்டி பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவர் என்பது பழமொழி. எட்டாவதாக பிறக்கும் பெண் குழந்தையை சொல்லுவதுண்டு. எட்டாவதாக பிறந்த கிருஷ்ணன் தன் மாமன் கம்சனையே கொன்று தன் குலத்தையே நாசம் செய்தார்.

                        பௌர்ணமி, அம்மாவாசைக்கு பிறகு வரும் எட்டாவது நாளை அஷ்டமி என்று எந்த ஒரு நல்ல செயலையும் செய்யாமல் ஒதுக்கி வைக்கிறோம் முஸ்லிம்கள்கூட எட்டு, பதினெட்டு, மூன்று, பதிமூன்று ஆகிய எண்கள் ஆகாது என்று கூறுவார். ஏனெனில் எட்டமிடம் ஆயுள், எதிரிகளை குறிக்கும் ஸ்தானம். கெட்டவன் எட்டினில் கிட்டிடும் ராஜயோகம் என்பர். எட்டில் கெட்ட கிரகம் இருந்தால் நன்மை செய்யும், நல்ல கிரகம் இருந்தால் தீமை செய்யும். இது மறைவு ஸ்தானம். பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை தெரிவிப்பது ஆகும். இந்த இடத்தில் நம் மனதுக்கு காரணமான சந்திரன் வரும் போது மனம் சரியாக இல்லாமல் எந்த காரியம் செய்தலும் குழப்பமே வரும் என நினைத்து சந்திராஷடமம் அன்று எந்த செயலையும் செய்ய பயப்படுகிறோம்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...