ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது அந்த 18 கருவிகள் வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுத்தி வை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும் பதினெட்டுப் படிகளை இந்திரியங்கள் ஐந்து ( 5 ) புலன்கள் ஐந்து ( 5 ) கோசங்கள் ஐந்து ( 5 ) குணங்கள் மூன்று ( 3 ) என்று கூறுகிறார்கள் அவை முறையே இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) : கண், காது, மூக்கு, நாக்கு, கை,கால்கள் புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும் 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள் மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, ச...