Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சிவபெருமானின் 19 அவதாரங்கள்

சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார். கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அது மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் நோக்கமே ஆகும். 

பிப்லாட் அவதாரம்: ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை வளரும் போதுதான் புரிந்து கொண்டார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார்.  

நந்தி அவதாரம்: நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்பட்டார். 

வீரபத்ர அவதாரம்: தட்சிணா யாகத்தில் சதிதேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையிலிருந்து சிறிது முடியை எடுத்து அதை தரையில் போட்டார் அப்போது அதிலிருந்து பிறந்தவர்தான் வீரபத்திர அவதாரம்.

பைரவ அவதாரம்: பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்று சண்டை வரும்போது சிவபெருமான் இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார். அப்போது பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்தார். ஒரு பிராமணனை கொன்ற குற்றவுணர்வு சிவபெருமானுக்கு இருந்தது. 

அஸ்வத்தாமா அவதாரம்: பார்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நஞ்சை உட்கொண்ட அந்த நேரத்தில் அவர் தொண்டை எரிய துவங்கியது. அப்போது சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்தது அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன்படி பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்களைக் கொள்வான் விஷ்ணுபுருஷ். 

ஷரபா அவதாரம்: ஷரபா வடிவத்தில் உள்ள சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே இந்த அவதாரம் எடுத்தார். 

கிரகபதி அவதாரம்: விஷ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக பிறந்தார். சிவபெருமான் அவருக்கு கிரகபதி என பெயரிட்டார் விஷ்வணார். கிரகபதிக்கு ஒன்பது வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் கூறினார். பின்பு சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் அவருக்கு இருந்த தோஷம் விலகியது. 

துருவாச அவதாரம்: அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவி ஆவார். 

அனுமான் அவதாரம்: குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் அவதாரம்தான் ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு பணிபுரிய இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்துள்ளார். 

ரிஷப அவதாரம்: பார்க்கடல் கடைதளுக்கு பிறகு கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான் அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கு தங்கி இருந்த பொழுது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரன் குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர் அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார்.

 யாதிநாத் அவதாரம் ஒரு முறை பழங்குடி சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான் அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள் ஒரு முறை யாகித் வடிவில் சிவபெருமான் சந்தித்தார் அவர்கள் இருக்கக்கூடிய சின்ன குடிசையில் விருந்தாளிகளை தங்க வைத்து தாங்கள் இரண்டு பேரும் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆனால் அன்று இரவு வன விலங்குகளால் கொல்லப்பட்டார் அப்போது அவர் மனைவி சாக நினைத்தால் தனது உருவத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார் அதன்படி அவளும் அவள் கணவனும் மீண்டும் மண்ணில் பிறப்பர். 

கிருஷ்ண தர்ஷன் அவதாரம்: ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

 விசு வரியா அவதாரம்: அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்

சுரேஷ்வர் அவதாரம்: தனது பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவில் உருவெடுத்தார் சிவபெருமான் அதனால் தான் அவரை சுரேஷ்வரர் என்று அழைக்கிறோம்.

 கீரத் அவதாரம்: அர்ஜுனன் தவத்தில் இருந்த பொழுது கீரத் அல்லது வேட்டைக்காரன் உருவம் எடுத்தார் சிவபெருமான். அர்ஜுனனை கொல்ல மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன். காட்டு பன்றி போல தன்னை மாற்றிக்கொண்டான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது அவன் கண்ணைத் திறந்து பார்த்தான் காட்டு பன்றியை அர்ஜுனனு தன் அம்புகளால் வீழ்த்தினார்கள் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ்த்தியது என்ற சந்தேகம் அர்ஜுனனுக்கும் கீரதுக்கும் இடையே வந்தது. 

சுண்டன் தர்கா அவதாரம்: திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை இமாலயா விடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.

 பிரமச்சாரி அவதாரம்: சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். 

எக்ஷெக்வர் அவதாரம்: கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான். 

அவதுட் அவதாரம்: இந்திரனின் திமிரை ஒழிக்கவே இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்தார்

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...