Skip to main content

Posts

Showing posts from July, 2017

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஆடிப்பெருக்கு திருநாள்

தெய்வ வழிபாடு விசேஷங்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உகந்த மாதம்  இந்த ஆடி மாதம்.  உழவு பணிகளை துவங்கும் மாதம். தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆ...

ஆடிப் பூரம் (ரேணுகை பவானி வளையல் அணிந்த கதை)

ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள்.  தன் பக்தர்களை குழந்தைகளாக பார்த்தாலும் அம்மனுக்கு ஒரு கவலை இருந்தது. அதாவது திருமணமான எல்லா பெண்களையும் போ...

கருட பஞ்சமி 

இறைவனை எப்படி வணங்குகிறோமோ அதுபோல இறைவனுடைய வாகனத்தையும் வணங்க வேண்டும். விஷ்ணு பகவானின் வாகனமான கருடனை வணங்கினால், அவர்களுக்கு திருமாலின் ஆசியும் அனுகிரகமும் ...

அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும். இற...

கணபதி வடிவங்கள்

1.பாலகணபதி 2.தருணகணபதி 3.பக்திகணபதி 4.வீரகணபதி 5.சக்திகணபதி 6.துவிஜகணபதி 7.சித்திகணபதி 8.உச்சிஷ்டகணபதி 9.விக்னகணபதி 10.க்ஷிப்ரகணபதி 11.ஹேரம்பகணபதி 12.லக்ஷ்மிகணபதி 13.மஹாகணபதி 14.வி...

18 சித்தர்கள் ஜீவசமாதி

யாரும் நேரடியாக கடவுளை பார்க்க முடியாது. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத...

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் இவர் திருச்சி உறையூரில் திருமாலின் மார்பில் உள்ள மருவான ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாக பாணர் குலத்தில் தோன்றியவர். தீண்டத்தகாதோர் குலத்தில் தோன்றியதால் காவிரியாற்றின் கரையில் நின்று அரங்கனைப் பாடுவார். ஒரு சமயம் சாரங்கர் என்பவர் அரங்கனுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும்போது வழியில் நின்ற திருப்பாணாழ்வாரை கல்லால் தாக்கினார். இதனால் ஆழ்வாரின் நெற்றியில் இரத்தம் வழிந்தது. இதனை அறியாது கருவறைக்கு சென்று சாரங்கர் பார்த்தபோது அரங்கனின் நெற்றியில் இரத்தம் வழிந்தது கண்டு திகைக்க திருப்பாணாழ்வார் தனது பக்தன் எனவும், அடியவருக்கு ஏற்படும் துன்பம் தனக்கு ஏற்பட்டது எனக்கூறி திருப்பாணாழ்வாரை தோளில் சுமந்து கோவிலுக்குள் அழைத்து வர கட்டளையிட்டார் திருமால். திருமாலின் விருப்பப்படி உள்ளே வந்த திருப்பாணாழ்வார் திருமாலின் உச்சி முதல் பாதம் வரை உள்ள அங்கங்களைப் பற்றி பாடி பூத உடலோடு இறைவனோடு இரண்டறக் கலந்தார். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற உண்மையை இவரின் வாழ்க்கை மூலம் அறியலாம். இவர் பாணர், முனிவாகனர், யோகிவாகனர் போன்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார். இவர் பிற ஆழ்வார்களுடன் இ...

ஆறு படை வீடுகள்

படைகள் தங்கும் இடம் படைவீடு ஆகும். சூரபத்மனிடம் போரிட முருகப் பெருமான் மற்றும் படை வீரர்கள் ஆறு இடங்களில் தங்கியிருந்த இடங்கள் ஆறு படை வீடுகள் ஆகும். முதல்படைவீட...

சுவாமிக்கு படைக்கும் நெய்வேத்தியங்கள்

நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம். திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே. திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம். திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப்பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகி...

மகாலட்சுமி பூஜை

அலைமீது வாசம் செய்யும் அலைமகள், ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபவள். அவள் நிலைத்து நின்றாலே செல்வம் நிலைக்கும். அப்படி நிலைத்திட்ட செல்வம் வேண்டுமானால், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கையாக நேசம்மிக்க திருமாலின் திருமார்பில் வாசம் செய்யும் வடிவில் அவளை வணங்க வேண்டும். திருமகளை, திருயாவும் தர வேண்டித் துதிக்கும் இப்பாடல்கள், குபேரனின் வாசற்கதவினைத் திறக்கச் செய்து, அங்குள்ள செல்வம், பக்தர்தம் இல்லம் வந்து சேரச் செய்திடும், அகல் விளக்கினை ஏற்றிவைத்துச் சொல்லி வர, செல்வம் செழிக்கும், 1.பொன்மகள் கடைக்கண் பார்வை புன்னகை புலர்ந்து கண்டால் நன்மைகள் யாவும் தேடி நயம்படக் கதவைத் தட்டும் ! மன்பதை போற்றும் செல்வம் மழையெனப் பொழியும்; வாழ்த்தும்! அன்னையே அலர்மேல் தேவி! அடியேனைக் காண்பா ரம்மா! 2. தேவியே கமல வல்லி; செந்திரு மாலின் கண்ணே! நாவினால் நின்னை யன்றி நயத்தகு நயத்தைக் காணேன்! காவியம் காணாச் செய்யுள் கற்பகத் திருவே! நின்றன் ஓவியம் நெஞ்சில் வைத்தே ஓதுவேன்; கடைக்கண் பாராய்! 3. நாரணன் தவத்தின் தேவி! ஞாலத்துப் பெண்கள் போற்றும் பூரணி! பூவில் வாழும் புன்னகை அரசி! எல்லாக் காரண கா...

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...