Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...

ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறை

பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து மாலை குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து  தாமரை மலர் கோலமிட வேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையார் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும். பால் பாயசம் வைப்பது விசேஷம். தங்களால் முடிந்த நெய்வேத்திய பொருட்களையும் வைத்து வழிபடலாம். நிலவை வணங்கி மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்கியதுடன் பித்ருக்களையும் ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து போற்றி பாடல்களையும் படிக்க வேண்டும். பூஜையின் முக்கிய அம்சமாக அன்னதானம் செய்ய வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் நெய்வேத்திய பிரசாதத்தை அருகில் வசிப்பவரிடம் கொடுக்கலாம். பூஜை முடிந்த பின்ன...

ஸ்ரீ ஸத்ய நாராயண கதை

ஸ்ரீசத்தியநாராயண பூஜையை பௌவுர்ணமியன்று செய்தால், குடும்பத்தில் தடைப்பட்ட   சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறும். பூஜையின் போது இந்த கதைகளை வாசிக்க வேண்டும். ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வறுமையில் வாடினான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருநாள்  வீப்ரதனை பார்த்து வீப்ரதா சௌக்கியமா என்றார். தாங்கள் யார். என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் உங்களை நான் இதுவரை பார்த்ததேயில்லையே என்றான் வீப்ரதன்.“இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ  நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன் என்றார் அந்த மகான். வீப்ரதனிடம் பேசுவது அந்த ஸ்ரீமன் நாராயணனே என்பது அவனுக்கு தெரியவில்லை. மகான் அவனை பார்த்து உன்னுடைய கஷ்டங்கள் என்ன என்று நீயே பலமுறை என்னிடம் வந்து வருத்த பட்டாய் . அதனால் நீ ஸ்ரீசத்தியநாராயணா பூஜை செய் என்றார்.  அந்த பூஜையை முறைப்படி செய்தால் உன்னுடைய பிரச்சனைகள் தீரும் என்று பூஜை முறைகளை ச...

பல்லி விழும் பலன்கள்

தலை - கலகம் குடுமி  - சுகம் கூந்தல் - லாபம் முகம் - பந்து தரிசனம் சிரஸு - கண்டம் நெற்றி - பட்டாபிஷேகம் வலது மற்றும் இடது புருவம் - ராஜனுக்கிரகம் வலது மற்றும் இடது புருவ மத்தி - புதல்வர் நாசம் வலது கபாலம் - சம்பத்து இடது கபாலம் - அன்பு தரிசனம் வலக்கண் - சுபம் இடக்கண் - கட்டுப்படுதல் மூக்கு - வியாதி மூக்கு நுனி - விசனம் மேல் உதடு - பொருள் நாசம் கீழ் உதடு - தன லாபம் மேவாய்க்கட்டை - ராஜதண்டனை வாய் - பயம் வலது காது - தீர்காயுசு இடது காது - வியாபாரம் கழுத்து - சத்துருநாசம் வலது புஜம் - ஆரோக்கியம் இடது புஜம் - ஸ்திரிசுகம் வலக்கை  - இம்சை இடக்கை - துயரம் வலது மணிக்கட்டு - பீடை இடது மணிக்கட்டு - கீர்த்தி வலது கைவிரல் - ராஜசன்மானம் இடது கைவிரல் - துயரம் வலது இடது கைவிரல்கள் - தனநாசம் மார்பு - தனலாபம் வலது இடது ஸ்தானங்கள் - பாவசம்பவம் இருதயம் - சௌக்கியம் தேகம் - தீர்க்காயுள் வலது விலா எலும்பு - வாழ்வு இடது விலா எலும்பு - கெண்டம் வயிறு - தான்யலாபம் நாபி - இரத்தின லாபம் முதுகு - நாசம் ஆண்குறி - தரித்திரம் பெண்குறி - லாபம் வலது இடது அபானம்...

சங்கு பூஜை செய்யும் முறை

சங்கு பூஜை செய்வதற்கு காலையில் குளித்து விட்டு வலம்புரி சங்கை சுத்தமான நீரில் கழுவவேண்டும். மஞ்சள், பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பஞ்சகவ்யம் ,பால்  வைத்து அபிஷேகம் செய்யவும். சங்கில் மஞ்சள் கலந்த நீரை எடுத்து  விநாயகர் சிலை மீது ஊற்றி ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குருதேவாய நம ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே  பாவ மானாய த்மஹி  தந்நோ சங்க ப்ரசோதயாத் . சொல்லவும். பின்னர் குபேர லட்சுமி படத்தின் அருகில் வைத்து  ஓம் குபேராய நமஹ ஓம்  லட்சுமி தேவி நமஹ என பதினோரு முறை கூறவும். இவ்வாறு 48 நாட்கள் சொல்லவும். வாசனை மலர்கள் கிடைத்தால் பூஜைக்கு பயன்படுத்தவும்.

சங்கு தோன்றியது எப்படி

தேவர்கள் அசுரர்களை விட வலிமையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அசுரர்களிடம் போரிட்டு தோல்வியை தழுவினார். இதனால் விஷ்ணுவிடம் சென்று நாங்கள் வெற்றி அடைய வழி சொல்லுமாறு வேண்டினார்கள். அதற்கு பாற்கடலை கடைந்தால் அதில் வரும் ஆயுதங்களை வைத்து வெல்லலாம் என்றார் விஷ்ணு. ஆனால் பாற்கடலை கடைவது எளிதல்ல.  உங்களுடன் அசுரர்களும் இணைந்து கடைய வேண்டும் அவ்வாறு செய்யும் போது அமிர்தம் வெளியவரும் அதை நீங்கள் அவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விடுங்கள் என்றார் விஷ்ணு. அவ்வாறு அசுரர்களுடன் கடையும் போது பதினாறுவகையான பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் திருமகளும் வலம்புரி சங்கும் வந்தது. திருமால் இரண்டையும் ஏற்று கொண்டார். வலம்புரி சங்கு என்கிற கடல்வாழ் உயிரியின் எலும்பு கூடு ஆகும். சங்கின் உள்ளே அந்த உயிர் இருக்கும். சங்கு பூஜை செய்தல் மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும். வாஸ்து குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டு காலையில் வீட்டில் தெளித்தால் குறைகள் நீங்கும். புது வீடு காட்டும் போது ஏழு வெள்ளிக்கிழமைகளில் காலை 06:00 - 07:00 குபேர லட்சுமி பூஜ...

முதலில் தோன்றிய அரக்கர்கள்

ஆதிசேஷன் மேலே விஷ்ணு படுத்திருந்து யோக நித்திரை செய்தார். அவர் பிரம்மாவின் அகங்காரம் அழிக்க நினைத்தார். தன் காதில் கைகளை விட்டு அழுத்தினார் அப்பொழுது வலது காதில் உள்ள அழுக்கை வெளியே போட்டார். அதிலிருந்து மது என்ற அரக்கன் தோன்றினான். இடது காதில் உள்ள அழுக்கை வெளியே போட்டார். அதிலிருந்து கைடவன் என்ற அரக்கன் தோன்றினான். இரு அரக்கர்களும் பயங்கர தோற்றத்தில் இருந்தனர். இருவரும் தண்ணீரில் குதித்து குதித்து அட்டகாசம் செய்தனர். இருவரும் தான் யார் என்பதை தெரிந்து கொள்ள எண்ணினார். அப்பொழுது வானில் ஓர் அசரீரி கண்களை மூடி கொண்டு தேவியை நினைத்து தவம் செய் என்றது. அவர்கள் இருவரும் அமைதியாக பல வருடங்கள் தவம் இருந்தனர், தவத்திற்கு வரம் கொடுக்க எண்ணி தேவி தோன்றினாள். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாள் தேவி. அரக்கர்கள் இருவரும் எங்களை எவராலும் தோற்கடிக்க கூடாது மற்றும் நாங்கள் நினைத்தாள் மட்டுமே மரணம் வர வேண்டும் என்றார்கள். உடனே வரம் கொடுத்த தேவி மது கையில் சூலமும் கைடவன் கையில் வேலும் கொடுத்து இது உங்கள் கையில் இருக்கும் வரை உங்களுக்கு அழிவு வராது என்றாள் தேவி. ஒரு நாள் தண்ணீ...