Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

முதலில் தோன்றிய அரக்கர்கள்

ஆதிசேஷன் மேலே விஷ்ணு படுத்திருந்து யோக நித்திரை செய்தார். அவர் பிரம்மாவின் அகங்காரம் அழிக்க நினைத்தார். தன் காதில் கைகளை விட்டு அழுத்தினார் அப்பொழுது வலது காதில் உள்ள அழுக்கை வெளியே போட்டார். அதிலிருந்து மது என்ற அரக்கன் தோன்றினான். இடது காதில் உள்ள அழுக்கை வெளியே போட்டார். அதிலிருந்து கைடவன் என்ற அரக்கன் தோன்றினான். இரு அரக்கர்களும் பயங்கர தோற்றத்தில் இருந்தனர். இருவரும் தண்ணீரில் குதித்து குதித்து அட்டகாசம் செய்தனர். இருவரும் தான் யார் என்பதை தெரிந்து கொள்ள எண்ணினார். அப்பொழுது வானில் ஓர் அசரீரி கண்களை மூடி கொண்டு தேவியை நினைத்து தவம் செய் என்றது. அவர்கள் இருவரும் அமைதியாக பல வருடங்கள் தவம் இருந்தனர்,

தவத்திற்கு வரம் கொடுக்க எண்ணி தேவி தோன்றினாள். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாள் தேவி. அரக்கர்கள் இருவரும் எங்களை எவராலும் தோற்கடிக்க கூடாது மற்றும் நாங்கள் நினைத்தாள் மட்டுமே மரணம் வர வேண்டும் என்றார்கள். உடனே வரம் கொடுத்த தேவி மது கையில் சூலமும் கைடவன் கையில் வேலும் கொடுத்து இது உங்கள் கையில் இருக்கும் வரை உங்களுக்கு அழிவு வராது என்றாள் தேவி.

ஒரு நாள் தண்ணீரில் தாமரை மலர் இருப்பதை கண்டு அதன் அருகில் சென்றனர். பிரம்மா நான் சிருஷ்டி செய்யாத இரு பயங்கர உருவத்தை கண்டு பயந்து தாமரைக்குள் ஒளிந்து கொண்டார். பின்னர் விஷ்ணுவிடம் இவர்கள் இருவரை பற்றியும் கேட்டு சரணாகதி அடைந்தார்.  

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...