Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பூஜை அறை அமைப்பது

                               பூஜை அறை வடகிழக்கு, தென்மேற்கு திசை மிகவும் சிறந்தது. அறையின் தெற்கு மேற்கு சுவற்றில் தெய்வ படங்களை மாட்டலாம். லக்ஷ்மி, வெங்கடசலபதி மற்றும் குபேரன் படங்களை வீட்டின் வெளிப்புறம் மாட்ட வேண்டாம். வீட்டின் நுழைவாயிலின் உள்புறம் உள்நோக்கி மாட்டினால் செல்வம் குறைவில்லாமல் இருக்கும். விளக்கு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்றலாம்.                             காலை மாலை இருவேளையும் உதுபத்தியை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் மூலைகளிலும் காட்டினால் அந்தந்த தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். பூஜை அறையில் சிறிய விளக்கு (மின்சார பல்பு ) ஒளிர செய்யலாம். பூஜை அறை எப்பொழுதும் நறுமணம் வீசியபடியே இருக்குமாறு பார்க்கவும்.             ...

ஸ்ரீ ஹனுமான் ஜாதகம்

ஸ்ரீ ஹனுமான் ஜாதகம்

ஸ்ரீ ராமபிரான் ஜாதகம்

                  நீங்கள் பார்ப்பது ஸ்ரீ ராமபிரான் ஜாதகம் இவருக்கு அதிகமான யோகங்கள் உள்ளன. ஐந்து கிரகங்களான அசுர குரு சுக்கிரன், தேவ குரு வியாழன், சனி பகவான், சூரியன், செவ்வாய் உச்சத்தில் உள்ளார்கள்.                     குருவும், செவ்வாயும் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் குரு மங்கள யோகமாகும். இதனால் எதற்கும் மனம் கலங்காதவராக இருப்பர்.                  கேது அயன சயன இடத்தில் இருப்பதால் அடிக்கடி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.சந்திரன், செவ்வாய் ஏழாம் இட பார்வையால் சந்திரமங்கள யோகமாகும். இதனால் பகை வெல்லல், அஞ்சா நெஞ்சம், மனஉறுதி, பிடிவாத குணம் வந்தது.புனர்பூசம் கடக லக்னத்தில் பிறந்ததால் இவர் தன்னுடைய மனைவியாக இருந்தாலும் மனம் புண்படும்படி பேசுகிறார்.            ...

சந்திர கிரகணம்

                        ஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 22-ம் தேதி வருகிற திங்கட்கிழமை (7-8-2017)  சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு விடுகிறது.  இன்றிரவு ஏற்படும் சந்திர கிரகணம் காரணமாக ரோகிணி, திருவோணம், அஸ்தம், உத்திராடம், அவிட்டம் ஆகிய 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் உரிய சந்திர பரிகாரம் செய்ய வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கட்கிழமைகளில் பிறந்தவர்களும்  உளுந்து தானம் செய்வது நன்மையளிக்கும். கர்ப்ப ஸ்திரிகள் கிரகண நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவும். கிரகணம் முடிந்த பின்னர் ஸ்நானம் செய்யலாம். சந்திர கிரகணம் அன்று செய்யக் கூடாதவை? சந்திர கிரகணம் தொடங்குவதற்கும் 2 மணி நேரத்திற்கு முன் எவ்வித உணவுகளையும் சாப்பிடக் கூடாது. சந்திர கிரகணத்தின் போது, கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. கிரகண நேரத்தில் ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தரிசனங்கள் செய்யக் கூடாது. சமைத்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்...

காரடையான் நோன்பு

                       மாசி மாதத்தில் உபநயனம் செய்வதும் நோன்புக் கயிறு கட்டிக் கொள்வதும்சகல பாக்கியத்தை கொடுப்பதாகும்.மாசி கயிறு பாசி படரும் (விருத்தியாகும்).பார்வதி தேவி ஒரு சமயம் ஏகாம்பர நாதனை காஞ்சியில் பூஜை செய்தாள்.                        அதனால் பரமேஸ்வரன் பார்வதியை விட்டு ஒரு நிமிடமும் பிரியாமல் இருந்தார்.அது போலவே பெண்கள் தங்கள் கணவர் தன்னை விட்டு பிரியாமலும், கணவர் நீண்ட ஆயுளுடனும் இருக்க இந்த விரத்தை மேற்கொள்ளலாம். அந்த தினத்தில் விரதம் இருப்பது காரடை நோன்பு அல்லது காமாக்ஷி விரதம் ஆகும்.                             கார் அரிசியை கொண்டு மாவாக்கி புதியதாக விளைந்த துவரையுடன் அடை போல் தட்டி அதில் காமாக்ஷியை ஆவாகனம் செய்து நோன்பு கையிற்றை அதன் மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் அந்த காமாக்ஷி நோன்பு கையிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம்.

சங்கடஹரசதுர்த்தி விரதம்

                                  சங்கடஹரசதுர்த்தி விரதம் என்பது தேய்பிறையில் வரும் சதுர்த்தி ஆகும். சங்கடம் என்றால் துன்பம் என்பதாகும். துன்பங்கள் நீங்குவதற்கு சங்கரஹரசதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கலாம் சங்கடங்கள்,நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகிறோம். சங்கடஹர கணபதியைவணங்கியவர்களில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும்.                                    சந்திரனும் கணபதியை சிறப்பாக வழிபட்டு அவருடைய நெற்றியில் முழு நிலவு திலகமாக விளங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று சந்திரனையும் வணங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று விடியும் முன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து கணபதியை வழிபட வேண்டும். அன்று இரவு சந்திரனை பார்த்துவிட்டு அவரை மனதில் தியானித்து இரவு உணவு உட்கொள்ளவும்.                           ...

விநாயகர் வழிபாட்டில் தோப்புக் கரணம் போடுவது ஏன்?

                            இரு காதுகளையும் அதாவது வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து செய்யும் பயிற்சியே தோப்புக் கரணம் ஆகும். யோக முறைப்படி உடலில் மூலாதார சக்ரத்திற்கு தெய்வமாகிற விநாயகரை இப்படி வழிபடுவதால் சுஷும்னாநாடி என்ற யோக நாளம் தட்டியெழுக்கப்பட்டு குண்டலினி சக்தி விழித்து எழுவதாகும்.                                அக கரணங்கள், புற கரணங்கள் ஆகிய இருவகை கரணங்களும் அடக்கப்பட்டு அகந்தையும், ஆணவமும் அழிந்து இறைவனை சரணடைவதே விநாயகர் வழிபாட்டில் தோப்புக் கரணம் போடுவதற்கு காரணமாகும்.