Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஸ்ரீ ராமபிரான் ஜாதகம்


                  நீங்கள் பார்ப்பது ஸ்ரீ ராமபிரான் ஜாதகம் இவருக்கு அதிகமான யோகங்கள் உள்ளன. ஐந்து கிரகங்களான அசுர குரு சுக்கிரன், தேவ குரு வியாழன், சனி பகவான், சூரியன், செவ்வாய் உச்சத்தில் உள்ளார்கள்.

                    குருவும், செவ்வாயும் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் குரு மங்கள யோகமாகும். இதனால் எதற்கும் மனம் கலங்காதவராக இருப்பர்.

                 கேது அயன சயன இடத்தில் இருப்பதால் அடிக்கடி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.சந்திரன், செவ்வாய் ஏழாம் இட பார்வையால் சந்திரமங்கள யோகமாகும். இதனால் பகை வெல்லல், அஞ்சா நெஞ்சம், மனஉறுதி, பிடிவாத குணம் வந்தது.புனர்பூசம் கடக லக்னத்தில் பிறந்ததால் இவர் தன்னுடைய மனைவியாக இருந்தாலும் மனம் புண்படும்படி பேசுகிறார்.

                சூரியன், சனி ஏழாம் பார்வை பார்ப்பதால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டது. புதனும் சூரியனும் ஒரே வீட்டில் இருப்பதால் புத ஆதிபத்திய யோகமாகும். இதனால் தந்திர வித்தைகளில் சிறந்து விளங்கினார். குருவும் சந்திரனும் ஒரே வீட்டில் இருப்பதால் குரு சந்திர யோகமாகும். இதனால்  கொரவமான உயர்ந்த வாழ்க்கை கிடைத்தது.

                 சூரியனுக்கு பன்னிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சத்தில் இருபது வாசி யோகமாகும். இதனால் சமுதாயத்தில் மரியாதை கௌரவம் கிடைத்தது. திரிகோணத்தில் சுக்கிரன் இருப்பது மாளவ்ய யோகமாகும். இதனால் ஆடம்பர, வசதி நிறைந்த வாழ்வு, பொழுதுபோக்கால் உற்சாகம் ஏற்படும்.கேந்திரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருபது ரூசக யோகமாகும். இதனால் பூமி யோகம், கல்வி மேன்மை, வீரம், அதிகாரபதவி, செயல்திறன் ஏற்படும்.

                 சனி பகவான் கேந்திரத்தில் இருப்பதால் சச யோகமாகும். இதனால் தலைமை பதவி, விசுவாசமிக்க தொழிலாளிகள், எதிர்பாரத தனசேர்க்கை உண்டாகும். ஐந்து கிரக உச்சத்தினால் நாடாளும் வாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கை ராஜ யோகத்தினால் ஏற்பட்டது. லக்ஷ்மிதானம் எனப்படும் ஒன்பதாம் பாவகதிபதி உச்சம் பெற்றதால் தரும காரிய சிந்தனை, திருப்பணியில் ஈடுபாடு ஏற்பட்டது.

                   இவ்வளவு யோகம் இருந்தும் ஸ்ரீ ராமபிரான் கடவுளாக இருந்தாலும் நவக்கிரக ஆதிக்கம் இவரை வழி நடத்தியது, அதனால் நாம் நவக்கிரகபதிப்புகளில் இருந்து மீள தினமும் தான தரும காரியங்களை செய்யலாம்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...