Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு....

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்.  காடாம்புழா பகவதி கோயில்  காலை : 5am  11am  மாலை : 3:30Pm  7pm  குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்  காலை : 3 மணி  1 மணி  மாலை 3 மணி  இரவு 9 மணி  திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்  காலை : 4.30AM  12pm  மாலை : 4.30Pm  8:30pm  கொடுங்களூர் பகவதி கோயில்  காலை : 4 மணி  12 மணி  மாலை : 4.30Pm  8pm  சோட்டானிக்கரை பகவதி கோயில்  காலை : 3:30AM  12pm  மாலை 4 மணி  இரவு 8 மணி  கீழ்க்காவு குருதி  இரவு: 8.30 மணி  வைக்கம் மகாதேவர் கோயில்  காலை : 4 மணி  12 மணி  மாலை 5 மணி  இரவு 8 மணி  கட்டுருத்தி மகாதேவர் கோயில்  காலை : 4 மணி  12 மணி  மாலை 5 மணி  இரவு 8 மணி  மல்லியூர் கணபதிகோயில்  காலை : 4.30AM  12:30pm  மாலை : 4.30Pm  8pm  ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்  காலை : 4 மணி  12 மணி  மாலை 5 மணி  இரவு 8 மணி  கிடங்கூர் சுப்...

பதினெட்டு படிகளின் தத்துவம்

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது  அந்த 18 கருவிகள் வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுத்தி வை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும் பதினெட்டுப் படிகளை இந்திரியங்கள் ஐந்து ( 5 ) புலன்கள் ஐந்து ( 5 ) கோசங்கள் ஐந்து ( 5 ) குணங்கள் மூன்று ( 3 ) என்று கூறுகிறார்கள் அவை முறையே இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) : கண், காது, மூக்கு, நாக்கு, கை,கால்கள் புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் )  பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் )  அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் )  ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும் 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள் மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, ச...

புலி குன்னூர் புலி கொன்று குருநாதன் முகடி

புலி குன்னூர் (புலி குன்று) பந்தளத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் புலி குன்னூர் அமைந்திருக்கிறது. புலிப்பால் கொண்டு வருவதற்காக ஐயப்பன் சுமார் ஆயிரக்கணக்கான புலிகளுடன் வந்ததும் பின்னர் அந்த புலிகளை திரும்பக் கொண்டு சென்று விட்ட போது ஒரு புலி இந்திரன் ஆகவும் ஒரு புலி வாயுவாகவும் இப்படி ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தேவனாக மாறி மறைந்த இடம் தான் இந்த புலி குன்னூர். மணிகண்டன் புலியுடன் வந்து கீழே இறங்கிய போது அவரது வலது பாதமும் புலியின் பாதமும் பதிந்திருப்பது இந்த ஸ்தத்தின் சிறப்பு ஆகும். குருநாதன் முகடி குன்னூரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. குருநாதன் ஐயப்பன் குருகுலத்தில் படித்து பல வித்தைகளை கற்றுக் கொண்ட இடம். முக்கியமாக குருநாதரின் வாய் பேச முடியாத குழந்தையை பேச வைத்து சாஸ்தா ஆசி வழங்கிய இடம் இதுதான். இந்த இடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் குழந்தைகளுக்கு கல்வி ஞானம் வளரும் என்பது உண்மை. மணிகண்டனுக்கு கல்வி கற்று தருவதற்காகவே அந்த குருநாதர் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.

சிவபெருமானின் 19 அவதாரங்கள்

சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார். கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அது மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் நோக்கமே ஆகும்.  பிப்லாட் அவதாரம்: ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை வளரும் போதுதான் புரிந்து கொண்டார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார்.   நந்தி அவதாரம்: நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்பட்டார்.  வீரபத்ர அவதாரம்: தட்சிணா யாகத்தில் சதிதேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்த...
1. தேவாரம்  2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா  5. திருப்பாவை  6. திருவெம்பாவை  7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி  13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..! 1.நற்றிணை  2.குறுந்தொகை  3.ஐங்குறுநூறு  4.அகநானூறு  5.புறநானூறு  6.பதிற்றுப்பத்து  7.பரிபாடல்  8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை  5.முல்லைப்பாட்டு  6.மதுரைக்காஞ்சி  7.நெடுநல்வாடை  8.குறிஞ்சிப் பாட்டு  9.பட்டினப்பாலை  10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....! 1.திருக்குறள்  2.நாலடியார்  3.நான்மணிக்கடிகை  4.இன்னாநாற்பது  5.இனியவை நாற்பது  6.கார் நாற்பது  7.களவழி நாற்பது  8.ஐந்திணை ஐம்பது  9.திணைமொழி ஐம்பது  10.ஐந்திணை எழுபது  11.திணைமாலை நூற்றைம்பது  12.திரிகடுகம்...

தாலி

பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை... இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும்... இது பெண்ணுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது... இதனால் ஆணை விட பெண்ணுக்கு அதிக நியாபக சக்தியை உண்டாக்குகிறது.....! இந்த அதிக நியாபக சக்தியால் ஆணை விட பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது... ஒரு பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால் குழப்பம் அடைவதற்குக்கு இதுதான் காரணம்.....! இதை கண்டறிந்த ஒரு ஞானி ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்து அதன் படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து, அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரச உரச பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த "தாலி" முறைய கொண்டு வந்தாங்க. அது சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும் என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு குழியில் வரும் என்று ஒரு கணக்கு போட்டார்கள். இந்த "தாலி...

காரிய சித்தி மந்திரம்

ஒரு நெய் விளக்கு ஏற்றிவிட்டு அதன் பிறகு ஒரு விநாயகரை பிடித்து வைத்து அவருக்கு அருகம்புல் சாற்றி அலங்கரித்துவிட்டு ,தேங்காய், பழம் ,சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி இவைகளுடன் ஒரு தட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு முறைப்படி விநாயகர் பூஜை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பி விபூதிதில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும். அதனுள்ளே ‘’ சிவாயநம’’ என எழுத வேண்டும். பிறகு கீழே உள்ள மந்திரம் அதை கூற வேண்டும் ஓம் சிவாய நம ஓம் ஓம் சர்வ சக்தி ஓம் ஓம் ஓங்கார சக்தி ஓம் ஓம் பிரணவப் பொருளே ஓம் ஓம் பஞ்சாட்சரமே ஓம் ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம் ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே ஓம் ஓம் சவர் ஜெயசக்தியே ஓம் ஓம் மசி நசி அங் மங் சங் ஆதார சக்தியே ஓம் இந்த மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் தினம் 108 முறை கூற வேண்டும். அதன் பிறகு தினமும் ஒரு முறை இந்த மந்திரத்தை கூறிவிட்டு விபூதி பரப்பி தகட்டில் கற்பூரம் ஏற்றி வணங்கிவிட்டு அந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி நிச்சயம்