Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஸ்ரீ ஸத்ய நாராயண கதை

ஸ்ரீசத்தியநாராயண பூஜையை பௌவுர்ணமியன்று செய்தால், குடும்பத்தில் தடைப்பட்ட   சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறும். பூஜையின் போது இந்த கதைகளை வாசிக்க வேண்டும்.


ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வறுமையில் வாடினான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருநாள்  வீப்ரதனை பார்த்து வீப்ரதா சௌக்கியமா என்றார். தாங்கள் யார். என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் உங்களை நான் இதுவரை பார்த்ததேயில்லையே என்றான் வீப்ரதன்.“இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ  நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன் என்றார் அந்த மகான்.

வீப்ரதனிடம் பேசுவது அந்த ஸ்ரீமன் நாராயணனே என்பது அவனுக்கு தெரியவில்லை. மகான் அவனை பார்த்து உன்னுடைய கஷ்டங்கள் என்ன என்று நீயே பலமுறை என்னிடம் வந்து வருத்த பட்டாய் . அதனால் நீ ஸ்ரீசத்தியநாராயணா பூஜை செய் என்றார்.  அந்த பூஜையை முறைப்படி செய்தால் உன்னுடைய பிரச்சனைகள் தீரும் என்று பூஜை முறைகளை சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அந்த மகான். வீப்தரன்  நேராக தன் மனைவியிடம் கடவுள் போல ஒரு மகான் நம் கஷ்டங்கள் தீர ஸ்ரீசத்தியநாராயண பூஜையை செய் கூறினார். அதனால் நாம் உடனே அந்த  பூஜையை தொடங்க வேண்டும் என்றான்.

அதற்கு மனைவி அடுத்தவேளை உணவுக்கு கூட வழி இல்லாமலும் சாதாரண பூஜைக்கே தேங்காய் பழம் வாங்கி பூஜை செய்வதே பெரிய கஷ்டமாக இருக்கும்போது யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக அன்னதானம் செய்து பூஜை செய்கிற நிலையிலா நாம் இருக்கிறோம் என்றாள். வீப்ரதன் எப்படியாவது பூஜையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். வரும் பௌவுர்ணமியன்று அந்த பெரியவர் சொன்னது போல பூஜை ஏற்பாடுகளை செய்கிறேன். நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்றான். 

ஒவ்வோரு வீடாக சென்று ஸ்ரீசத்தியநாராயண பூஜை செய்ய இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பணிவுடன் கேட்டான் வீப்ரதன். இறைவனின் அருளால் உணவு பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களும் கிடைத்தது. பூஜையை தொடங்கினான். பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்துக் கொள்ளும்படி அனைவரையும் அழைத்தான் வீப்ரதன். அங்கு வந்தவர்களோ பரேதேசியாக இருப்பவன் சத்தியநாராயண பூஜையை செய்கிறானாம். இவ்வாறு செய்தால் பணக்காரனாக மாறிவிடுவானா என்று வயிற்றெரிச்சலோடு பூஜையில் கலந்து கொண்டார்கள். அந்த பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவனும் பூஜையில் கலந்துக் கொண்டான். பூஜை நல்லபடியாக முடிந்தது. வீப்ரதனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் வந்தவர்களுக்கு சிரித்த முகத்துடன் உணவை பரிமாறினார்கள். விருந்து முடிந்து எல்லோரும் புறப்பட்டார்கள். ஆனால் அந்த வழிபோக்கன் மட்டும் வீப்ரதனிடம், அய்யா நான் ஒரு வழிப்போக்கன் பசி என்னை வாட்டியெடுத்தால் இந்த பூஜையில் நீங்கள் அழைக்காமல் நான் கலந்துக் கொண்டு, நீங்கள் தந்த அன்னதானத்தில் சாப்பிட்டேன்.

 


பூஜை சிறப்பாக இருந்தது. உணவுக்காக தேடி வந்த நான் ஸ்ரீசத்தியநாராயண பூஜை தரிசனத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்றான் வழிபோக்கன். ஸ்ரீசத்தியநாராயண பூஜையை காண கண்கோடி வேண்டும். என் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தளித்த தாங்களும், தங்கள் குடும்பமும் எல்லா செல்வமும் பெற்று நோய் நொடியின்றி மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினான். பூஜையின் பயனாக வீப்ரதன், எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாக அமைந்தது. அவன் ஆரம்பித்த தொழிலும் நல்ல லாபம் தந்தது. பூஜையில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட வழிபோக்கனின் மகளுக்கு திருமணம் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்தது. பூஜையே செய்யா விட்டாலும், வீப்ரதன் நடத்திய பூஜையில் நல்ல எண்ணத்துடண் கலந்து கொண்டதற்கே நன்மைகளை பெற்றான் வழிப்போக்கன். வீப்ரதனின் பூஜை மற்றும் அன்னதானத்தை கேலி பேசியவர்கள், முன் இருந்ததை போலவே இருந்தனர், புனிதமான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போது  நம்முடைய எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.  

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...