Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

12 சிவன் கோவில்

சிவ பக்தரான வியாக்ரபாத மகரிஷியே புருஷாமிருகம் 
புருஷா மிருகம் விஷ்ணு நாமத்தை கேட்க விரும்பாத ஒரு வினோத விலங்கு தர்மர் நடத்திய ராஜஸீய யாகத்திற்கு புருஷமிருகத்தின் பால் தேவைப்பட்டது.அதை எடுத்து வர பீமனுக்கு தர்மர் உத்தரவிட்டார்.

பீமரிடம் 12 ருத்ராட்ச கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும் படி ஸ்ரீகிருஷ்ணன் கூறினார். ருத்ராட்ச கொட்டையுடன் காட்டிற்கு சென்றான்.புருஷாமிருகம் திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த பீமன் கோவிந்தா, கோபால என்று உரக்க கூறினார்.

தவம் கலைந்த புருஷா மிருகம் பீமனை துரத்தியது.அப்போது பீமன் ஒரு ருத்ராட்சத்தை தூக்கி எறிந்தான்.அது சிவ லிங்கமாக மாறியது.
உடனே புருஷாமிருகம் சிவனை பூஜிக்க தொடங்கியது.
மீண்டும் பீமன் கோவிந்தா, கோபாலா என உரக்கக் கூறினார்.
மீண்டும் தவம் கலைந்த புருஷாமிருகம் பீமரை துரத்தியது.
மீண்டும் ருத்ராட்ச கொட்டையை எறிந்தான்.அது சிவலிங்கமாக மாறியது. புருஷாமிருகம் பூஜித்தது.இப்படி 11 ருத்ராட்ச கொட்டைகளை எறிந்து அவை சிவலிங்கமாக மாறிய பின் அதை புருஷாமிருகம் பூஜிப்பதும் பின்னர் துரத்துவதுமாக இருந்தது.

12–வது இடத்தில் திருநட்டாலத்தில் ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷா மிருகம் பிடித்து பீமரை தாக்க முற்பட்டது.அப்போது அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணன் பீமருக்கும், புருஷாமிருகத்திற்கும்
ஹரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தினார்.
வைணவ வழி தோன்றலான பீமரும், சைவ வழி தோன்றலான புருஷா மிருகமும் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டனர்.

தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம்.
இதை உணர்த்தும் வகையில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் கோவிந்தா! கோபாலா!!கோஷத்துடன் மாசி மாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று மாலை யணிந்து சிவபக்தர்கள்,
கையில் விபூதியுடன் கூடிய மஞ்சள் பை மற்றும் பனை ஓலை விசிறியுடன் 12 சிவாலயங்களுக்கும் ஓடி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கல் குளம் தாலுகா, விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட 12 சிவாலயங்களையும் 112 கிலோ மீட்டர் தூரம் ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கின்றனர்.


  1. முஞ்சிறை அருகே திருமலை மகாதேவர் கோவில்,
  2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
  3. திற்பரப்பு மகாதேவர் கோவில்,
  4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்,
  5. பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில்,
  6. திருபன்னி பாகம் சிவன் கோவில்
  7. கல் குளம் நீலகண்ட சுவாமி கோவில்,
  8. மேலாங்கோடு சிவன் கோவில்,
  9. திருவிடைக்கோடு மகாதேவர் கோவில்,
  10. திருவி தாங்கோடு சிவன்கோவில்,
  11. திருபன்றிகோடு மகாதேவர் கோவில்,
  12. திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...