Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் உண்மையா?

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த வரன்களை ஏற்றுக் கொள்ள பயப்படுவது ஏன்?
ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சந்திரனும் உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால்தான் பலவிதமான நன்மைகளும் நாடாளும் யோகமும் ஏற்படுகிறது. இதையே ஆனி மூலம் அரசாளும் என்றனர். இதுவே பின்நாளில் ஆண் மூலம் அரசாளும் என்று மாறியது.
மூலம் நட்சத்திரத்தில் 4வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்து தனது எதிரிகளை நிர்மூலம் செய்து வெல்ல கூடிய திறமை உள்ளவர்கள். இதுதான் பின்மூலம் நிர்மூலம் என்றானது. பின்நாளில் பெண்மூலம் நிர்மூலம் என்றனர்.
லக்னத்துக்கு 3ம் வீடு மாமனார் வீடு இங்கு கேது இருந்தாலோ அல்லது 4 வது  9 வது வீடுகளில் கேது இருந்தாலோ மாமனாருக்கு கெடுதல் ஏற்படலாம். மற்றபடி மூலம் நட்சத்திரத்தில் மட்டுமே எந்த விதமான தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
பரிகாரம்:-
மூலம் நட்சத்திர அதிபதி கேது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகர், திருப்பதி அருகே காளகஸ்தியில் இருக்கும் பாதாள விநாயகர் , மயிலாடுதுறை அருகே உள்ள கீழபெரும்பள்ளத்திற்க்கும் சென்று கேதுவிற்கான பரிகாரம் செய்தால் நன்மைகள் கிடைக்கும்.

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...