கிரகண நேரத்தில் குழந்தை பிறந்தால்

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் சந்திரனின் ஒளி தேவைப்படுவதைப்போல இனி பிறக்கப் போகும் உயிரின் உடல் பலத்திற்கும் மன நலத்திற்கும் அது தேவை என்பதால்தான் கருவுற்றிருக்கும் பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே வர வேண்டாம் என ஜோதிடம் அக்கறையுடன் அறிவுறுத்துகிறது.

அதேபோல கிரகண நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும் கிரகண தோஷம் எனப்படும் சந்திர வலுக்குறைவு ஏற்படுகிறது.

சந்திரன் என்பது ஒருவருக்கு தாயையும் மனோபலத்தையும் குறிக்கும் கிரகம் என்பதால் சந்திரன் ராகுவால் பாதிக்கப்படும் இதுபோன்ற நேரங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்வழி நன்மைகளும் ஆக்கசக்திக்கு தேவைப்படும் மனோபலமும் பாதிக்கப்படும் என்பது வேதஜோதிடத்தின் முடிவு.

அதேநேரத்தில் ஒரு குழந்தைபிறக்கும் நேரம் அதன் முந்தைய கர்ம வினைகளைப் பொறுத்தது. என்பதோடு அது நம் கைகளிலும் இல்லை. எந்த ஒரு ஜனனமும் பரம்பொருளின் விருப்பத்திற்கும் கட்டளைக்கும் உட்பட்டது.

ஆயினும் இது தாய் சேய் இரண்டின் உயிர்ப்பிரச்னை என்பதால் கடவுளுக்குச் சமமான மருத்துவரின் முடிவுக்கு கட்டுப்படுவது நல்லது. 

கருத்துகள்