Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

நவகிரகங்கள்

                           

மனிதனின் வல்வினை தீர்மானிப்பவை நவகிரகங்கள் ஆகும். நாம் செய்யும் அன்றாட நன்மை, தீமைகளை இந்த ஜென்மத்திலும், அடுத்த ஜென்மத்திலும், முந்தைய ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்தும் நன்மை, தீமைகளை கிடைக்க செய்வார்கள்.மக்களின் மனதை ஆட்சி செய்ய இறைவனால் நியமிக்கப்பட்டவை. இப்பிரபஞ்சம் நெருப்புக் கோளத்திலிருந்து சிதறிய கோள்கள் பல உள்ளன. அவற்றில் பூமியின் மீது ஏழு கிரகங்கள் மற்றும் வட, தென் துருவங்களில் வெட்டிக் கொள்கின்ற ஒளிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

                           படைக்கும் தொழிலுக்கு உதவியாக பிரம்மா - மரீசி, புலஸ்தியர், அத்திரி, பிருகு, ஆங்கிரசர், புவனகர், வசிஷ்டர் ஆகிய சப்த ரிஷிகளை படைத்தார். இதில் முதலாமவரான  மரீசியின் புதல்வரான காசிபருக்கு பிறந்தவரே சூரியன். அத்திரி மகரிஷிக்கு புதல்வர் சந்திரன் ஆவார். சந்திரனுக்கும் குருவின் மனைவிக்கும் பிறந்தவரே புதன் ஆவார். ஆங்கிரசாருக்கு தேவ குருவான பிரகஸ்பதி புதல்வர் ஆவார். வசிஷ்டருக்கு செவ்வாயும் , சூரியனுக்கும் சூரியனின் மனைவி சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவரே தர்ம நெறிபிரலாத சனீச்வர பகவான் ஆவார்

                            சூரியனின் தந்தை காசிபருக்கு அசுர மனைவிவாயிலாக பிறந்தவரே சுவர்பானு.அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடையும் போது வெளிப்பட்ட அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுத்தார் விஷ்ணு. அப்பொழுது சூரிய, சந்திரர்களுக்கு இடையே தேவ வடிவில் சுவர்பானு அமிர்தத்தை உண்டார். இதை கவனித்த சூரிய, சந்திரர் விஷ்ணுவிடம் சொல்லுகின்றனர்.

                          உடனே விஷ்ணு சுவர்பானுவை கரண்டியால் தட்டுகிறார்.  அமிர்தம் உண்டதால் தலை வேறு முண்டம் வேறாக பிரிந்து பூமியை சுற்றுகின்றன. பின்னர் தன் மௌன மொழியால் பிரம்மனை வணங்கி உயிர் பிச்சை கேட்கின்றன. அவர் பிரிந்த உடலை இணைக்க முடியாது என கூறி தலையுடன் பாம்பின் உடலையும், உடலுடன் பாம்பின் தலையும் இணைத்து நவகிரகங்களாக செய்கிறார்.

                            அவற்றிற்கு ராகு, கேது என பெயரிட்டு அசுர ஆதிக்கம் முடிந்தபின் உங்கள் செயல் நடைபெறும் என்றார். இவ்விரு கிரகமும் வலமிருந்து இடமாக சுற்றுகின்றன. சூரிய, சந்திரர் காட்டி கொடுத்தால் இருவரையும் சூரிய, சந்திர கிரகனங்களாக சில மணி நேரம் செயல் இழக்க செய்கின்றது.

                      .

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...