Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பசுவின் பின்பக்கத்தை வணங்குவது ஏன்?

             
            ராமனின் வனவாசத்தின் போது தன் தந்தை தசரத சக்ரவர்த்திக்கு சிரார்த்தம் செய்வதற்கு காட்டில் உள்ள பழங்களை பறிக்கச் சென்றார். உடன் லட்சுமணன் சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால் சிரார்த்தத்தை பெறுவதற்காக தசரத சக்ரவர்த்தி வந்தார். அவர் சிரார்த்த நேரம் முடியும் முன்பாக சிரார்த்த உணவுகளை படைக்குமாறு சீதா தேவியிடம் சொன்னார்.

                          அதற்கு சீதா தேவி ராமன்தான் சிரார்த்தம் பண்ணமுடியும் நான் பெண் என்பதால் செய்ய இயலாது என்றாள். ஆனால் தசரத சக்ரவர்த்தியோ சிரார்த்த நேரம் முடியும் முன்பாக சிரார்த்த உணவுகளை படைத்தால் மட்டுமே என்னால் பெறமுடியும் என்றார். அதற்க்கு சாட்சியாக யாரையாவது வைத்துக் கொள் என்றார்.

                      அவர் சொன்னதால் பசு, அக்னி, தாழம்பூ போன்றவற்றை சாட்சியாக வைத்து பழத்தினை வேகவைத்து மாவாக்கி தர்பன உணவுகளை படைத்தாள் தசரத சக்ரவர்த்தி சுவர்க்கலோகம் திரும்பினார். காலதாமதமாக வந்த ராமன் சீதா தேவியிடம் விரைவாக சிரார்த்த உணவுகளை படைக்குமாறு சொன்னார்.அதற்க்கு சீதா தேவி ஏற்கனவே சிரார்த்தம் செய்து விட்டதாகவும் சாட்சியாக பசு, அக்னி, தாழம்பூ ஆகிய மூன்றும் உள்ளதாக சொன்னாள்.

                    பசு, அக்னி, தாழம்பூ இவர்களிடம் ராமன் கேட்டதற்கு தங்களுக்கு
எதுவும் தெரியாதது போல் ராமனுக்கு பயந்து மௌனமாக இருந்து விட்டது. ராமன் தன மனைவியிடம் ஏதும் சொல்லாமல் தந்தை தசரத சக்ரவர்த்திக்கு சிரார்த்தம் செய்வதற்கு நதியில் இறங்கினர் அப்போது தசரத சக்ரவர்த்தி நான் சீதா தேவியிடம் சிரார்த்தம் வாங்கியதாக சொன்னார். பின் ராமனுக்கு சீதை மிது உள்ள கோபம் தணிந்தது.

   
               சீதா தேவி அந்த நேரம் மௌனமாக இருந்த பசுவிடம் உண்மையை மறைத்ததால் உன் முகத்தில் வாசம் செய்யும் லக்ஷ்மி தேவி பின்பக்கம் செல்வாள் எனவும், அக்னியிடம் நீ சுத்தம், அசுத்தம் என பாராமல் எல்லா இடத்திலும் பரவுவாய் எனவும், தாழம்பூவிடம் நான் சிவனுக்கு உன்னை அர்ச்சனைக்கு பயன்படுத்தியதால் நீயும் நீதி தவறி விட்டதால் இனி சிவனுக்கு பயன்பட மாட்டாய் என சாபமிட்டாள். அதனால் தான் பசுவின் பின்பக்கத்தை வணங்குகிறோம்.

படங்கள் : கூகிள் நன்றி

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...