Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும் பிரச்சனை ஏற்படுகிறது ஏன்?

                         

ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் கொண்டு செல்லும் போது வீ ட்டினில் ஏற்படும் சகுனங்களை பார்க்கவும். செல்வதற்கு முன்பு தும்மல் வந்தாலோ அல்லது ஒருவர் நீர் அருந்திவிட்டு செல்லவும் என கூறினாலும் அபசகுனமாகும். பொருத்தம் பார்பவரிடம் இந்த வரன்கள் நல்ல வசதியாய் உள்ளனர் என சொல்ல வேண்டாம்.

                          ராசி பொருத்தம் , நட்சத்திர பொருத்தம். வேதை பொருத்தம், யோனி பொருத்தம், தினப் பொருத்தம், ராசியாதிபதி பொருத்தம், மகேந்திர பொருத்தம், நாடி பொருத்தம், கண பொருத்தம், செவ்வாய் தோஷம் இருக்கிறதா என பர்ர்க்கவும். பத்து பொருத்தம் பார்ப்பது மட்டும் போதாது.

                       லக்னாதிபதி நட்பாக இருந்தால் மட்டுமே ஒற்றுமையாக இருக்கமுடியும். லக்னத்தில் ராகு உள்ளவர் லக்னத்தில் கேது உள்ளவரை திருமணம் செய்யாமல் இருப்பது நலம். லக்னத்தில் கேது உள்ளவர் லக்னத்தில் ராகு உள்ளவரை திருமணம் செய்யாமல் இருப்பது நலம். இவ்வாறு இருந்தால் கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு உண்டாக்கலாம். மணப்பொருத்தம் என்பது சந்திரன் நிற்கும் நிலையை வைத்து சொல்வது. மணமக்களுக்கு ஒருவருக்கு சந்திரன் நிற்கும் இடம் மற்றவருக்கு சந்திரன் 6,8,12-ல் இல்லாமல் இருப்பது நலம்.

                        ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ வியாழநோக்கு (குருவின் பார்வை) இருக்கும் பொது திருமணம் செய்யலாம்.சனி,ராகு,கேது,செவ்வாய்,சூரியன் புத்தி நடக்கும் சமயத்தில் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். ஒரே ராசியிலோ அல்லது ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம்.

                       மாங்கல்யத்தை மஞ்சள் நிறக் கயிற்றால் கட்டுதல் சிறப்பாகும். கோவிலில் திருமணம் செய்தாலே தோஷங்கள் நிவர்த்தியாகலாம்.

              

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...