Skip to main content

Posts

Showing posts from January, 2015

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

காரடையான் நோன்பு

                       மாசி மாதத்தில் உபநயனம் செய்வதும் நோன்புக் கயிறு கட்டிக் கொள்வதும்சகல பாக்கியத்தை கொடுப்பதாகும்.மாசி கயிறு பாசி படரும் (விருத்தியாகும்).பார்வதி தேவி ஒரு சமயம் ஏகாம்பர நாதனை காஞ்சியில் பூஜை செய்தாள்.                        அதனால் பரமேஸ்வரன் பார்வதியை விட்டு ஒரு நிமிடமும் பிரியாமல் இருந்தார்.அது போலவே பெண்கள் தங்கள் கணவர் தன்னை விட்டு பிரியாமலும், கணவர் நீண்ட ஆயுளுடனும் இருக்க இந்த விரத்தை மேற்கொள்ளலாம். அந்த தினத்தில் விரதம் இருப்பது காரடை நோன்பு அல்லது காமாக்ஷி விரதம் ஆகும்.                             கார் அரிசியை கொண்டு மாவாக்கி புதியதாக விளைந்த துவரையுடன் அடை போல் தட்டி அதில் காமாக்ஷியை ஆவாகனம் செய்து நோன்பு கையிற்றை அதன் மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் அந்த காமாக்ஷி நோன்பு கையிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம்.

சங்கடஹரசதுர்த்தி விரதம்

                                  சங்கடஹரசதுர்த்தி விரதம் என்பது தேய்பிறையில் வரும் சதுர்த்தி ஆகும். சங்கடம் என்றால் துன்பம் என்பதாகும். துன்பங்கள் நீங்குவதற்கு சங்கரஹரசதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கலாம் சங்கடங்கள்,நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகிறோம். சங்கடஹர கணபதியைவணங்கியவர்களில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும்.                                    சந்திரனும் கணபதியை சிறப்பாக வழிபட்டு அவருடைய நெற்றியில் முழு நிலவு திலகமாக விளங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று சந்திரனையும் வணங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று விடியும் முன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து கணபதியை வழிபட வேண்டும். அன்று இரவு சந்திரனை பார்த்துவிட்டு அவரை மனதில் தியானித்து இரவு உணவு உட்கொள்ளவும்.                           ...